Ad Code

6th social science term-2 Book back Question and Answer -மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

6th social science term-2 Book back Question and Answer

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

 மூன்று ரத்தினங்கள்

கர்மாவிலிருந்து விடுதலை பெறுவதற்கும் மோட்ச நிலையை அடைவதற்கும் மகாவீரர் மூன்று வழிகளை அறிவுறுத்தினார்.

அவை

நன்னம்பிக்கை

நல்லறிவு

நற்செயல்

கௌதம புத்தர்

பௌத்த மதத்தை நிறுவியவர் கௌதம புத்தர் ஆவார். 

அவரின் இயற்பெயர் சித்தார்த்தர். மகாவீரரைப் போலவே இவரும் ஒரு சத்திரிய இளவரசர். அரசாட்சி செய்து கொண்டிருந்த சாக்கிய அரசவம்சத்தில் பிறந்தவர். சித்தார்த்தர் ஏழு நாள் குழந்தையாக இருந்த போது அவருடைய தாயார் இயற்கை எய்தினார். எனவே அவருடைய சிற்றன்னை கௌதமி அவரை வளர்த்தார்.

நான்கு பெரும் காட்சிகள்



சித்தார்த்தா தனது 29வது வயதில் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளைக் கண்டார். 

அவை

„கூன் விழுந்த முதுகுடனும், கந்தல் ஆடைகளுடனும் கவனிப்பாரற்ற ஒரு முதியவர்.

„குணப்படுத்த முடியாத வியாதியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நோயாளி.

„இறந்துவிட்ட ஒரு மனிதனின் சடலம் அழுது கொண்டிருக்கும் அவனின் உறவினர்களால் இடுகாட்டிற்குக் கொண்டு செல்லப்படுதல்.

„ஒரு துறவி.

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

1. பௌத்த நூல்களின் பெயர் என்ன?

 அ) அங்கங்கள்

ஆ) திரிபீடகங்கள்

இ) திருக்குறள்

ஈ) நாலடியார்


2. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?

 அ) ரிஷபர்

ஆ) பார்சவநாதர்

இ) வர்தமானர்

ஈ) புத்தர்

3. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?

 அ) 23

) 24

இ) 25

ஈ) 26

4. மூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது?

 அ) ராஜகிரகம்

ஆ) வைசாலி

இ) பாடலிபுத்திரம் 

ஈ) காஷ்மீர்

5. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?

 அ) லும்பினி

ஆ) சாரநாத் 

இ) தட்சசீலம்

ஈ) புத்தகயா

II. கூற்றோடு காரணத்தைப் பொருத்துக / பொருத்தமான விடையை தேர்ந்தெடு.

1. கூற்று: ஒரு சாதாரண மனிதரால் உபநிடதங்களைப் புரிந்து கொள்ள இயலாது.

 காரணம்: உபநிடதங்கள் மிகவும் தத்துவம் சார்ந்தவை.

 அ) கூற்றும் அதன் காரணமும் சரியானவை.

 ஆ) கூற்று தவறானது.

 இ) கூற்று சரியானது; ஆனால் அதற்கான காரணம் தவறானது.

 ஈ) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு.

2. கூற்று: ஜாதகங்கள் புகழ் பெற்ற கதைகளாகும்

 காரணம்:அஜந்தா குகையின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதகக் கதைகளைச் சித்தரிக்கின்றன.

அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி.

ஆ) கூற்று தவறு.

இ) கூற்று சரி; ஆனால் அதற்கான காரணம் தவறு.

 ஈ) கூற்றும் அதற்கான காரணம் ஆகிய இரண்டும் தவறு.

3. சரியான விடையைக் கண்டறியவும்.

விகாரைகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன?

 1. கல்விக் கூடமாக

 2. பௌத்தத் துறவிகளின் தங்குமிடம்

 3. புனிதப் பயணிகள் தங்குவதற்காக

 4. வழிபாட்டுக் கூடம்

 அ) 2 சரி 
ஆ) 1 மற்றும் 3 சரி
 இ) 1, 2, 4 ஆகியவை சரி 
ஈ) 1 மற்றும் 4 சரி

4. சமணமும் பௌத்தமும் உருவாவதற்கு கீழ்க்கண்டக் கூற்றுகளைக் காரணமாகக் 
கருதலாமா?

 1. வேள்விச்சடங்குகள் பெருஞ்செலவு மிக்கதாக இருந்தன.

 2. மூடநம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் சாதாரண மனிதர்களைக் குழப்பமுறச் செய்தன.

மேற்சொல்லப்பட்ட கூற்றில்/கூற்றுகளில், எது/எவை சரியானது/சரியானவை.

 அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

இ) 1 மற்றும் 2

ஈ) 1 மற்றும் 2 ம் இல்லை

5. சமணம் குறித்த கீழ்க் கண்டவற்றுள் எது சரியானது?

 அ) உலகைக் கடவுள் தோற்றுவித்தார் என்பதைச் சமணம் மறுக்கிறது.

 ஆ) உலகைத் தோற்றுவித்தவர் கடவுள் என்பதை சமணம் ஒத்துக் கொள்கிறது.

இ) சமணத்தின் அடிப்படைத் தத்துவம் சிலைவழிபாடாகும்

 ஈ) இறுதித்தீர்ப்பு எனும் நம்பிக்கையைச் சமணம் ஒத்துக் கொள்கிறது.

6. பொருந்தாததை வட்டமிடு.

 பார்சவா, மகாவீரர், புத்தர், ரிஷபர்

7. தவறான இணையைக் கண்டுபிடி

 அ) அகிம்சை - காயப்படுத்தாமல் இருத்தல்

 ஆ) சத்யம்- உண்மைபேசுதல்

 இ) அஸ்தேயம்- திருடாமை

 ஈ) பிரம்மச்சரியம் - திருமண நிலை

8. சித்தார்த்த கௌதமர் குறித்து கீழே காண்பனவற்றுள் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் சரி.

 அ) இந்து மதத்தை நிறுவியவர் அவரே.

 ஆ) அவர் நேபாளத்தில் பிறந்தார்.

 இ) அவர் நிர்வாணம் அடைந்தார்.

 ஈ) அவர் சாக்கியமுனி என்று அறியப்பட்டார்.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. மகாவீரரின் கோட்பாடு ____________ என்று அழைக்கப்படுகிறது.

2. ____________ என்பது துன்பங்களிலிருந்தும் மறுபிறவியிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு நிலை.

3. பௌத்தத்தை நிறுவியவர் ____________ ஆவார்.

4. காஞ்சிபுரத்திலுள்ள, திருப்பருத்திக்குன்றம் என்னும் கிராமம் ஒரு காலத்தில் ____________ என்று அழைக்கப்பட்டது.

5. ____________ என்பது புத்தரின் உடல் எச்சங்கள் மீது கட்டப்பட்டனவாகும்.

விடைகள் :
1.திரிரத்தினங்கள்
2.நிர்வாணம்
3.கௌதம புத்தர்
4.ஜைனக் காஞ்சி
5.ஸ்தூபி

IV. சரியா? தவறா?
1. புத்தர் கர்மாவை நம்பினார்.சரி

2. புத்தருக்குச் சாதி முறை மேல் நம்பிக்கை இருந்தது.தவறு

3. கௌதம சுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார்.சரி

4. விகாரைகள் என்பன கோவில்களாகும்.தவறு

5. அசோகர் பௌத்த மதத்தைப்பின்பற்றினார்.சரி

V. பொருத்துக.

1. அங்கங்கள்-வர்தமானர்

2. மகாவீரர்-துறவிகள்

3. புத்தர்-பௌத்தக் கோவில்கள்

4. சைத்தியம்- சாக்கியமுனி

5. பிட்சுக்கள்- சமண நூல்

விடைகள்;
1-உ,2-அ,3-ஈ,4-இ,5-ஆ

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

1. சமணத்தின் மூன்று ரத்தினங்கள் எவை?

  • நன்னம்பிக்கை, 
  • நல்லறிவு, 
  • நற்செயல் ஆகியன சமணத்தின் மூன்று ரத்தினங்கள் ஆகும்.

2.பௌத்தத்தின் இரு பிரிவுகள் எவை ?
  • ஹீனயானம், மகாயானம் ஆகிய இரண்டும் பௌத்தத்தின் இரு பிரிவுகளாகும்,

3. 'ஜினா' என்பதின் பொருள் என்ன?
  •  ஜினா என்றால் தன்னையும், வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும் .
4.பௌத்தத்திற்கும் சமணத்திற்கும் உள்ள இரண்டு பொதுவான கூறுகளை எழுதுக

  • சமணமும், பௌத்தமும் கர்மா என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர். 
  • மக்கள் பேசிய தாய்மொழிகளில் போதித்தனர்
*வேதங்களின் ஆதிக்கத்தை மறுத்தனர்.

5. பௌத்த சங்கத்தைப் பற்றி குறிப்பெழுதுக?
  •  புத்தர் தனது கருத்துகளைப் பரப்ப சங்கங்களை நிறுவினார். 
  • அதன் உறுப்பினர்களான துறவிகள் பிட்சுக்கள்' என அழைக்கப்பட்டனர் .
  • இச்சங்கங்கள் நாடு முழுவதும் புத்தர் கொள்கைகளைப் பரப்பினர்.

6.கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த சீனப் பயணியின் பெயரைக் குறிப்பிடுக 
  • கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த சீனப் பயணி யுவான் சுவாங் ஆவார்.
7.சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் ஜைனத் துறவியின் பெயர் என்ன ?
  • சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் ஜைனத் துறவி கவுந்தியடிகள் ஆவார்.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

1. பௌத்தத்தின் எட்டு நெறிகளின் பெயர்களைக் குறிப்பிடுக
  • நல்ல நம்பிக்கை
  • நல்ல எண்ணம்
  • நல்ல பேச்சு
  • நல்ல செயல்
  • நல்ல வாழ்க்கை
  • நல்ல முயற்சி
  • நல்ல அறிவு
  • நல்ல தியானம் 
ஆகியன பௌத்தத்தின் எண்வகை வழிகள் .






Post a Comment

0 Comments

Ad Code