Ad Code

6th social Science term-2 Book back question and answer - Tamil Medium குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

 6th social Science term-2 Book back question and answer - Tamil Medium

குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

„கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். பதினாறு மகாஜனபதங்களின் எழுச்சிக்கு அது சாட்சியாய் இருந்தது.

„பதினாறு மகாஜனபதங்களில் மகதம் ஒரு பேரரசாய் எழுச்சி பெற்றது.

„மகதமானது ஹரியங்கா, சிசுநாக, நந்த, மௌரிய அரச வம்சங்களால் ஆளப்பட்டது.

„மௌரியப் பேரரசை சந்திரகுப்த மௌரியர் நிறுவினார்.

„மௌரிய அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் அசோகர் ஆவார்.

„அசோகரின் தூண் கல்வெட்டுகளும் மற்றும் பாறைக் கல்வெட்டுகளும், தம்மா பற்றிய அவரது கொள்கைகளை நமக்கு உணர்த்துகின்றன.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

 அ) அங்கம்

ஆ) மகதம்

இ) கோசலம்

ஈ) வஜ்ஜி

2. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?

 அ) அஜாதசத்ரு

ஆ) பிந்துசாரர்

இ) பத்மநாப நந்தா 

ஈ) பிருகத்ரதா

3. கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?

 அ) அர்த்த சாஸ்திரம்

ஆ) இண்டிகா

 இ) முத்ராராட்சஷம்

ஈ) இவை அனைத்தும்

4. சந்திரகுப்த மௌரியர் அறியணையைத் துறந்து ____________ என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.

 அ) பத்ரபாகு

ஆ) ஸ்துலபாகு

இ) பார்ஸவநாதா 

ஈ) ரிஷபநாதா

5. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர்____________.

 அ) டாலமி

ஆ) கௌடில்யர்

இ) செர்சக்ஸ் 

ஈ) மெகஸ்தனிஸ்

6. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?

 அ) சந்திரகுப்த மௌரியர்

ஆ) அசோகர்

இ) பிருகத்ரதா 

ஈ)பிந்துசாரர்

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்துக / சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. கூற்று: அசோகர் இந்தியாவின் மாபெரும் பேரரசர் என கருதப்படுகிறார்.

 காரணம்: தர்மத்தின் கொள்கையின்படி அவர் ஆட்சி புரிந்தார்

 அ) கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

 ஆ) கூற்றும் காரணமும் உண்மையானவை, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

 இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

 ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

2. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரி.

 கூற்று 1. ஒட்டுமொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைந்த முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர் ஆவார்.

 கூற்று 2. மெளரியரின் நிர்வாகம் பற்றிய செய்திகளை அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.

 அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

 இ) 1, 2 ஆகிய இரண்டும்

ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை

3. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி.

 1. மகதத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர்

 2. ராஜகிரிகம் மகதத்தின் தலைநகராய் இருந்தது.

 அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

 இ) 1 மற்றும் 2

ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை

4. கீழ்க்காண்பனவற்றைக் காலக்கோட்டின்படி வரிசைப்படுத்தவும்

 அ) நந்தா ,சிசுநாகா ,ஹரியங்கா ,மௌரியா

 ஆ) நந்தா,சிசுநாகா,மௌரியா,ஹரியங்கா

 இ) ஹரியங்கா ,சிசுநாகா ,நந்தா ,மௌரியா

 ஈ) சிசுநாகா ,மௌரியா ,நந்தா,ஹரியங்கா

5. கீழ்க்கண்டவைகளில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்குக் காரணமாயிற்று

 1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்

 2. அடர்ந்த காடுகள் மரங்களையும், யானைகளையும் வழங்கின

 3. கடலின் மீதான ஆதிக்கம்

 4. வளமான இரும்புத் தாது கிடைத்தமையால்

 அ) 1, 2 மற்றும் 3 மட்டும்

 ஆ) 3 மற்றும் 4 மட்டும்

 இ) 1, 2 மற்றும் 4 மட்டும்

 ஈ) இவையனைத்தும்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ____________ மகதத்தின் தொடக்ககாலத் தலைநகராக இருந்தது.

2. முத்ரராட்சசத்தை எழுதியவர் ____________.

3. ____________ பிந்துசாரரின் மகனாவார்.

4. மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் ____________.

5. நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக ____________பணியமர்த்தப்பட்டனர்.

IV. சரியா? தவறா? 

1. தேவனாம்பியா எனும் பட்டம் சந்திரகுப்த மௌரியருக்கு வழங்கப்பட்டது.

2. அசோகர் கலிங்கப்போரில் தோல்வியடைந்த பின்னர் போரைக் கைவிட்டார்.

3. அசோகருடைய தம்மா பௌத்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.

4. நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் ராம்பூர்வா தூண்களின் காளை சிகரப் பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும்.

5. புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூயின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

V. கீழ்க்கண்டவற்றை பொருத்துக.

 அ) கணா -  1) அர்த்தசாஸ்திரம்

 ஆ) மெகஸ்தனிஸ்-  2) மதச் சுற்றுப்பயணம்

 இ) சாணக்கியா -3) மக்கள்

 ஈ) தர்மயாத்திரை - 4) இண்டிகா

 அ) 3,4,1,2

 ஆ) 2,4,3,1

 இ) 3,1,2,4

 ஈ)2,1,4,3

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

1. மௌரியர் காலத்திற்கான இரண்டு இலக்கியச் சான்றுகளைக் குறிப்பிடவும்.

2. ஸ்தூபி என்றால் என்ன?

3. மகத அரச வம்சங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

4. மௌரியர் காலத்தில் அரசு வருவாய் எவற்றிலிருந்து பெறப்பட்டது?

5. நகரங்களின் நிர்வாகத்தில் ‘நகரிகா’வுக்கு உதவியவர் யார்?

6. அ

சோகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைப் பேராணைகளிலிருந்து நீங்கள் 

அறிவதென்ன?

7. மௌரியர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்ற ஒரு தமிழ் நூல் கூறுக?

X. நான் யார்.

1. நான் ஹரியங்கா அரச வம்சத்தைச் சேர்ந்தவன். திருமண உறவுகளின் மூலம் எனது பிரதேசங்களை விரிவு படுத்தினேன். அஜாதசத்ரு எனது மகன். நான் யார்?

2. சமூகத்தை மாற்றியமைத்ததில் நான் முக்கியப்பங்கு வகித்தேன். கலப்பைக்கொழுமுனைசெய்வதற்கு நான் பயன்படுகிறேன். நான் யார்?

3. நான் தேவனாம்பிய என அறியப்பட்டேன். நான் அமைதி வழியை தழுவிக் கொண்டேன். நான் யார்?

4. நான் இந்தியாவின் முதல் பேரரசை நிறுவினேன். நான் ‘சல்லேகனா’ நோன்பிருந்தேன். நான் யார்?

5. அசோகரின் சிங்கத் தலைப்பகுதி தூணில் நான் காணப்படுகிறேன். நம்முடைய தேசியக்

கொடியின் மையத்தில் உள்ளேன். நான் யார்?


1. மகதத்தை ஆண்ட முதல் அரச வம்சம் __________(39, 30, 27, 6, 5)

2. __________ பேரரசு இந்தியாவின் முதல் பெரிய பேரரசாகும். (26, 30, 27)

3. __________ புதிய தலை நகரான பாடலிபுத்திரத்திற்கு அடித்தளமிட்டார் (2, 13, 27, 38)

4. __________ ஒரு முக்கியமான ஏற்று மதிப்பொருள் (17, 36, 24,11, 19, 22, 31, 34)

5. பண்டைய மகத நாட்டில் இருந்த மடாலயம் பின்னர் புகழ்பெற்ற கல்வி நிலையமாக 

திகழ்ந்தது (18, 35, 16, 14)

6. நிலவரி __________ (20, 5)

7. கலிங்கப் போரின் பயங்கரம் __________ பொறிக்கப்பட்டுள்ளது (21, 37, 3, 4, 32, 33, 

9, 10)

8. கிரேக்கர்கள் பிந்துசாரரை __________ என்று அழைத்தனர் (1, 25, 28, 13, 4, 14)

9. சாரநாத் தூணின் சிகரப்பகுதியில் அமைந்துள்ளது __________ (13, 28, 24, 7, 8, 3, 4, 

29, 23)

10. அமைச்சரவை __________ என அழைக்கப்பட்டது (24, 16, 15, 30, 20, 30, 40, 12)


Post a Comment

0 Comments

Ad Code