Ad Code

6th Social Science Term-2 Book back Question - answer

6th Social Science Term-2 Book back Question - answer 

வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்



I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

1. ஆரியர்கள் முதலில் __________ பகுதியில் குடியமர்ந்தனர்.

அ) பஞ்சாப்  

ஆ) கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி

இ) காஷ்மீர்

ஈ) வடகிழக்கு

2. ஆரியர்கள் __________ லிருந்து வந்தனர்.

 அ) சீனா  

ஆ) வடக்கு ஆசியா

இ) மத்திய ஆசியா

ஈ) ஐரோப்பா

3. நம்நாட்டின் தேசிய குறிக்கோள் “வாய்மையே வெல்லும்” __________லிருந்து எடுக்கப்பட்டது.

அ) பிராமணம்  

ஆ) ஆரண்யகம்

இ) வேதம்  

ஈ) உபநிடதம்

4. வேதகாலத்தில் எந்த விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

அ) 1/3

ஆ) 1/6

இ) 1/8

ஈ) 1/9

II. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. கூற்று:

வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கியச் சான்றுகள் மற்றும் பயன்பாட்டுபொருள் சான்றுகள் கிடைத்துள்ளன.

 காரணம்: நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.

 அ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

 ஆ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

 இ) கூற்று சரி; காரணம் தவறு

 ஈ) கூற்று தவறு; காரணம் சரி

2. கூற்று1: தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டதுஎன்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிக்கப்பட்டது என்றும்பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்.

 கூற்று 2: இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.

 அ) கூற்று 1 தவறானது

 ஆ) கூற்று 2 தவறானது

 இ) இரண்டு கூற்றுகளும் சரியானவை

 ஈ) இரண்டு கூற்றுகளும் தவறானவை

3. வேதகால சமூகம் தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.

 அ) ஒரு கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளலாம்.

 ஆ) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது.

 இ) தந்தையின் சொத்துக்களை மகன் மரபுரிமையாகப் பெற்றான்.

 ஈ) உடன்கட்டை ஏறுதல் தெரியாது.

4. கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது?

 அ) கிராமா < குலா < விஷ் < ராஷ்டிரம் < ஜனா

 ஆ)குலா <கிராமா<விஷ்<ஜனா<ராஷ்டிரம்

 இ) ராஷ்டிரம் < ஜனா < கிராமா < குலா < விஷ்

 ஈ) ஜனா < கிராம < குலா < விஷ் < ராஷ்டிரம்

III.

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. வேதப்பண்பாடு __________ இயல்பைக் கொண்டிருந்தது.

2. வேதகாலத்தில் மக்களிடமிருந்து __________ என்ற வரி வசூலிக்கப்பட்டது.

3. __________ முறையானது பண்டைய கால கல்விகற்கும் முறையாகும்.

4. ஆதிச்சநல்லூர் __________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.

விடைகள்:

1.கிராம

2. பாலி

3.குருகுலக்கல்வி

4.தூத்துக்குடி

IV. சரியா? தவறா?

1. பல இடங்களில் கிடைத்துள்ள ரோமானியக் தொல் பொருட்கள் இந்திய-ரோமானிய வணிக உறவுகளுக்குச் சான்றுகளாய் உள்ளன. சரி

2. நடுகல் என்பது மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய ஒரு வீரனின் நினைவாகநடப்படுவதாகும்.சரி

3. படைத்தளபதி ‘கிராமணி’ என அழைக்கப்பட்டார். தவறு

4. கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும்

.சரி

5. பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.சரி

V. பொருத்துக.

 அ) கீழடி-1. பகடை

 ஆ) பொருந்தல் - 2. கொழு முனைகள்

 இ) கொடுமணல் - 3. சுழல் அச்சுக்கள்

 ஈ) ஆதிச்சநல்லூர் - 4. தங்க ஆபரணங்கள்

அ) 4 3 2 1

ஆ) 3 4 1 2

இ) 1 3 4 2

ஈ) 1 2 3 4

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி.,

1.நான்கு வேதங்களின் பெயர்களைக் குறிப்பிடுக 

  • ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்கள் ஆகும்.


2.வேதகால மக்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் யாவை?

  •  குதிரைகள், பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், காளைகள் மற்றும் நாய்கள்

3. 'பெருங்கற்காலம்' பற்றி நீங்கள் அறிந்தது என்ன?

  •  இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்கால பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது.
4. 'கற்திட்டைகள்' என்பது என்ன ?

  • கற்திட்டைகள் என்பது இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறமும் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாகவும் அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்திலும் வைக்கப்படுவதாகும்.

5.முதுமக்கள் தாழிகள் என்றால் என்ன ?

  • இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண் பானைகள் முதுமக்கள் தாழிகள் எனப்படும்.

6. வேதகாலத்தில் வணிகப் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களின் பெயர்களைக் கூறுக?

  •  நிஷ்கா, சத்மனா என்ற தங்க நாணயங்களும்
  •  கிருஷ்ணாலா என்ற வெள்ளி நாணயங்களும் 
  • வேதகாலத்தில் பயன்படுத்தப்பட்டது.

7.தமிழ்நாட்டில் காணப்படும் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களின் பெயர்களைக் குறிப்பிடுக?

  •  முதுமக்கள் தாழிகள், கற்திட்டைகள், நினைவு கற்கள், நடுகற்கள் ஆகியன தமிழ்நாட்டில் காணப்படும் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களாகும்.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

1. கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.

2. வேதகாலப் பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.

VIII. உயர் சிந்தனை வினா.

1. குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

கூடுதல் வினாக்கள்

1.சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.இறந்து போன வீரர்களின் நினைவை போற்றும் வகையில் நடப்படும் கல் எவ்வாறு அழைக்கப்பட்டது.

ஆ) நடுக்கல் 

அ) வீக்கல்

இ) நினைவுக்கல் 

ஈ) பெயர் கல்

விடை: ஆ) நடுக்கல்

2.ஸ்மிருதி என்பதன் பொருள்

அ) எழுதப்படாத பிரதி 

இ) கேட்டல்

ஆ) எழுதப்பட்ட பிரதி

ஈ) எழுதுதல்

விடை: ஆ) எழுதப்பட்ட பிரதி

3.பின் வேதகால சமுதாயத்திற்குள் எத்தனை பிரிவுகள் காணப்பட்டன

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 6

விடை: : இ) 4

4.நிலத்தின் மீதுள்ள மரங்கள் மற்றும் செடி கொடிகள் அனைத்தும் வெட்டப்பட்டு எரிக்கப்படு வேளாண் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது

அ) இயற்கை வேளாண் முறை

ஆ) செயற்கை வேளாண் முறை

இ) அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறை

ஈ) எதுவும் இல்லை

விடை: இ அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறை

5. கொடுமனல் கீழக்கண்ட எந்த நூலில் இடம் பெற்றுள்ளது

அ) பட்டினபப்பாலை

ஆ) அகநானூறு

இ) பொருநாற்றுப்படை

விடை: ஈ) பதிற்றுப்பத்து

ஈ) பதிற்றுப்பத்து

6.பின் வேதகாலத்தில் பிரஜாபதி என்பவர்

அ) காப்பவர்

ஆ) அழிப்பவர் 

இ) கொடுப்பவர்

விடை: ஈ) படைப்பவர்

ஈ) படைப்பவர்

7. சத்தியமேவ ஜெயதே என்ற வாக்கியம் எந்த உபநிடதத்திலிருந்து எடுக்கப்பட்டது 

ஆ) மாண்டூக்கிய உபநிடதம்

அ) முண்டக உபநிடதம்

இ) மைத்திரி உபநிடதம் 

ஈ) கதா உபநிடதம்

விடை: அ) முண்டக உபநிடதம்

8. வேதகால மக்களின் முதன்மை பயிர் எது

அ) கோதுமை 

ஆ) பருத்தி

 இ) நெல்

விடை: ஈ) பார்லி

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

1.ஏழு ஆறுகள் ஓடும் பஞ்சாப் நிலப்பகுதி 

விடை: சப்தசிந்து என அழைக்கப்பட்டது

2.சுருதி என்றால் விடை: கேட்டல் என்று பொருள்

3.ரிக்வேத கால அரசியல்________  உறவுகளை அடிப்படையாகக் கொண்டது

விடை: ரத்த

4.__________ என்பது வேதகால அரசியலின் அடிப்படை அலகு விடை: குலம்

5.கிராமங்களின் தொகுப்பு விடை: விஸ் என அழைக்கப்பட்டது 

6.________மட்பாண்டங்கள் வேத காலத்தைச் சார்ந்ததாகும்.

விடை: பழுப்பு மஞ்சள் 

7.ரிக்வேத கால ஆரியர்களின் முதன்மைத் தொழில் _________.

விடை: கால்நடைகள் மேய்ப்பதாகும் 

8.கருப்பு நிற ஆரியர் அல்லாத மக்கள்

விடை: தசயுக்கள், தாசர்கள் என அழைக்கப்பட்டனர்

9. பின்வேத காலத்தில் ஆரியர்கள் விடை: யானை  விலங்கை பழக்கப்படுத்தினர்.

10.பின்வேத காலம் ______நிற மட்பாண்டப் பண்பாடு என அழைக்கப்பட்டது 

விடை: வர்ணம் தீட்டப்பட்ட சாம்பல்

Post a Comment

0 Comments

Ad Code