Ad Code

10th tamil Important 2 mark questions Guide

 

 பத்தாம் வகுப்பு - இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்தல் , வழுவமைதி வகைகள்  | katrathukalvi - samacheer Kalvi guide


                                                           

1 .இரு சொற்களையும்  ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

         இயல் - 3                               ப .எண் : 68
1சிலை -  சீலை
சிலையைத்  திரைச்சீலையால்  மறைத்திருக்கிறார்கள் .
2. தொடு -   தோடு
தொடு உணர்வின்  மூலம்  தோடு காதில் உள்ளதை  தெரிந்துகொள்ளலாம் .                                              (அல்லது)
தாய் தன் குழந்தையின் காதைத் தொடுவதன் மூலம்   தோடு  அணிவித்தாள் .
3. மடு -  மாடு
கிணற்றில்  இருந்து  இறைக்கும் தண்ணீர்  மடு வழியாக  வாய்க்காலுக்கு சென்றதால்  மாடு தண்ணீர்  குடித்தது .  
                                                 (அல்லது)
மடுவில் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தது ராமனின்  மாடு .
4. மலை - மாலை
மலையேறும் போது  மாலை நேரமாகிவிட்டது .        
                                                ( அல்லது)
மலை மீது இருக்கும் கோவிலுக்கு மாலை  நேரத்தில் சென்றேன் .
5. வளி - வாளி
  வளிமண்டல காற்று பெற  மரம் நட்டு  வாளி நிறைய தண்ணீர் ஊற்றுவோம் .
6. விடு - வீடு
இளம் வயதிலே தீய பழக்கங்களை விட்டு விடு ; வீடு சென்று மகிழ்ச்சியாக இரு .

இயல் - 4                                                       ப.எண் : 96

7. இயற்கை -  செயற்கை

பாதை தெரியாத இயற்கைக் காடுகளில்  பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுகின்றன .
8. கொடு -  கோடு
ஆசிரியர் எழுதுகோலை  மாணவனிடம் கொடுத்து , கோடு வரையச்  சொன்னார் .
9.  கொள் -  கோள்
மனதிலே   நம்பிக்கை  வைத்துக் கொள் ;  கோள்களுக்கும் சென்று வருவாய் என தந்தை மகனுக்கு  தைரியம் ஊட்டினார் .
10 . சிறு -  சீறு
சிறுவயதில் வளர்த்த காளைக் கன்றுக்குட்டி பின்னாளில்  சீறிப்பாயும் காளையாக மாறி நின்றது  .
11 . தான் - தாம்
மாணவர்கள் தான் படித்தக் கருத்துகளைத்  தாமே எழுதிப் பார்த்து  மதிப்பீடு  செய்துகொண்டார்கள் .
12 . விதி -  வீதி
சாலை விதியை மதித்து , வீதியைக் கடந்து செல்வோம் .

--------------------------------------------------------------------------------------------------------------------------
2 .                    இயல் - 2                  ப, எண் :46

 1.  மலர் உண்டு . பெயரும்  உண்டு . -  இரண்டு தொடர்களை ஒரு தொடராக்குக .
மலரும் மலருக்குப் பெரும் உண்டு .
2 . தொடரில்  பொருந்தாப் பொருள் தரும்  மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக .                                    ப, எண் :46
இலுப்பை பூக்கள் இனிமையானவை . கரடிகள் மறத்தின் மீதேறி  அவற்றைப் பரித்து  உண்ணும் .  பாதிரிப் பூ  குடிநீருக்குத்   தன் மனத்தை ஏற்றும் .
விடை  :
இலுப்பைப்  பூக்கள் இனிப்பானவை ,  கரடிகள்  மரத்தின் மீதேறி ,  அவற்றைப் பறித்து  உண்ணும் .  பாதிரிப் பூ   குடிநீருக்குத்  தன் மணத்தை ஏற்றும் . 




-----------------------------------------------------------------------------------------------------------------------

3 .  கற்பவை கற்றபின்                            ப, எண் : 92


கீழ்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை  இனங்கண்டு எழுதுக .


அ)  அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார் .
விடை  :  கால வழுவமைதி
இத்தொடர்  ' நாளை விழாவிற்கு வருவார் '  என  என அமையவில்லை  என்றாலும்  பிழையாகக் கருதுவதில்லை . ஏனெனில்  அவரது வருகையின் உறுதி தன்மை நோக்கிக்  கால வழுவமைதியாக  ஏற்றுக் கொள்கிறோம் .

2 . அவனும் நீயும் அலுவலரைப்  பார்க்க ஆயத்தமாகுங்கள் .
இட வழுவமைதி
"நீயும் அவனும் " என தன்மை இடத்தை முதலில் கூறவில்லை என்றாலும் பிழையாகக் கருதாமல் இட வழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

3 ." இந்தக் கண்ணன்   ஒன்றைச் செய்தான் என்றால் ,  அதை அனைவரும் ஏற்பர் "  என்று கூறினான் .
இட வழுவமைதி
இந்தக் கண்ணன்  என்பான்  தன்னைப்பற்றி  பிறரிடம் கூறும் போது  தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது   இட வழுவமைதி ஆகும் .

4. சிறிய வயதில் அந்த மரத்தில் தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம் .

கால வழுவமைதி .
" இத்தொடரில்" சிறிய வயதில்   எள்பது இறந்தக்கால நிகழ்வாதலால்  " ஊஞ்சல் கட்டி விளையாடினோம் "  அமையாததால்  பிழையாகக் கருதவில்லை . ஏனெனில்  சிறுவயதில் ஊஞ்சல் கட்டி விளையாடியதின்   உறுதித்தன்மையை நோக்கி காலவழுவமைதி ஆக ஏற்றுக் கொள்கிறோம்

5 .  செல்வன் இளவேலன்  இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்திருக்கிறார் .
பால் வழுவமைதி.
இத்தொடரில் " சாதனை புரிந்திருக்கிறான் "  என அமையாமல் " சாதனை புரிந்திருக்கிறார் "  என பலர்பால் கூறப்பட்டுள்ளதால் இது பால் வழுவமைதியாகக்  கொள்ளப்பட்டது .


--------------------------------------------------------------------------------------------------------------------------

4 .அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக .

அ)  தந்தை , "  மகனே !  நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா!"  என்று சொன்னார் .(  ஆண்பால்  பெயர்களைப் பெண்பாலாக  மாற்றித் தொடர் எழுதுக .)
  தாய் , "  மகளே நாளை  உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா !"  என்று  சொன்னாள் .
ஆ)  அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது . அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பினர். (  வழுவை வழாநிலையாக மாற்று )

அக்கா நேற்று வீட்டுக்கு வந்தாள் .  அக்கா புறப்படும்போது , அம்மா வழியனுப்பினார் .

இ) "  இதோ முடித்து விடுவேன் "  என்று  செயலை முடிக்கும் முன்பே கூறினார் .(  வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக )
"  இதோ ,  முடித்துவிட்டேன் "  என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார் .

ஈ)  அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை .(  படர்க்கையை முன்னிலையாக ,  முன்னிலையைத் தன்மையாக , தன்மையைப் படர்க்கையாக மாற்றுக ).
நீ  என்னிடமும் அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை .

உ)  குழந்தை அழுகிறான் ,  பார் . (  வழுவை வழாநிலையாக மாற்றுக . )
குழந்தை அழுகிறது பார் .






----------------------------------------------------------------------------------------------------------------------
10th Tamil Guide ,10th Tamil important 2 marks question, 10th Tamil important study material, 10th Tamil full guide,10th Tamil notes,10th Tamil slow learners study material, 10th Tamil guide PDF download, 10th Tamil online study material, 10th Tamil important questions, 10th Tamil guide important questions and answer ,10th Tamil important 2 mark questions PDF download, 10th Tamil repeated question,


Post a Comment

0 Comments

Ad Code