Ad Code

10th tamil- ilakkanam important questions Guide

 

10 TH STD GRAMMAR IMPORTANT QUESTIONS- 

பத்தாம் வகுப்பு -வட்டார வழக்குச் சொற்கள்,

கூட்டப்பெயர்கள்,  

எழுவாய் தொடர் , 

பெயரெச்சத் தொடர் - 

விளித்தொடர் , 

பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றுதல் |katrathukalvi- samacheer Kalvi


வட்டார வழக்குச் சொற்கள்  

    இயல் - 3           ப.எண்  : 61
1. பாய்ச்சல் -  பாத்தி
2 . பதனம்  -  கவனமாக
3 . நீத்துப்பாகம் -  மேல் கஞ்சி
4.  கடிச்சு குடித்தல்  -  வாய் வைத்து குடித்தல்
5 . மகுளி -  சோற்றுக் கஞ்சி
6 . வரத்துக்காரன் -  புதியவன்
7 . சடைத்து புளித்து  -  சலிப்பு
8 . அலுக்கம் -  அழுத்தம் ( அணுக்கம் )
9 .தொலவட்டையில் -  தொலைவில்

========================================================================

 கீழ்காணும் சொற்களின் கூட்டப் பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக .   
         இயல் - 1          ப.எண்  : 21
1 .கல் -  குவியல்
2 .பழம் - குலை
3 .புல் - கட்டு
4 .ஆடு - மந்தை
5 . சாவி -  கொத்து
6 .எறும்பு - சாரை
7 .வீரர் - படை
8 .யானை - கூட்டம்
9 .மாமரம் - தோப்பு
10 .வாழைமரம் - தோட்டம்
11 .வாழைப்பழம் - தார்



===================================================================

வேர்ச்சொல்லைப் பயன்படுத்தி  எழுவாய் தொடர் , பெயரெச்சத் தொடர் ,   வினையெச்சத் தொடர், விளித்தொடர் ,  வேற்றுமைத் தொடர்  அமைக்க .

வேர்ச்சொல் :  ஓடு ,  சொல் ,  தா ,  பார் , வா . 

  இயல் - 5           ப.எண்  : 123
1 . ஓடு :
அ ) அருணா ஓடினாள் -  எழுவாய் தொடர்
ஆ)  ஓடிய அருணா -  பெயரெச்சத் தொடர்
இ)  ஓடிவந்தாள் -  வினையெச்சத் தொடர்
ஈ)  அருணா ஓடாதே ! -  விளித்தொடர்
)  அருணாவிற்காக ஓடினாள் -   வேற்றுமைத்தொடர்
2 . சொல் :
அ)  அம்மா சொன்னார் -  எழுவாய் தொடர்
ஆ)  சொன்ன அம்மா -  பெயரெச்சத் தொடர்
இ)  சொல்லிச் சென்றார் -  வினையெச்சத் தொடர்
ஈ)  அம்மா சொல்லாதே -  விளித்தொடர்
உ)  கதையைச் சொன்னார் -  வேற்றுமைத் தொடர்
3 .தா :
அ)  அரசர் தந்தார் -  எழுவாய்த்தொடர்
ஆ)  தங்க அரசர் -  பெயரெச்சத் தொடர்
இ) தந்து சென்றார் -  வினையெச்சத் தொடர்
ஈ)  அரசே தருக ! -  விளித்தொடர்
உ)  தருவற்காக அரசர் -  வேற்றுமைத் தொடர்
4 . பார் :
அ) துளிர் பார்த்தாள் -  எழுவாய்த் தொடர்
ஆ)  பார்த்த துளிர் - பெயரெச்சத்தொடர்
இ) பார்த்து சிரித்தாள் -  வினையெச்சத் தொடர்
ஈ)  துளிரே பார் ! -  விளித்தொடர்
உ) துளிருடன் பார்த்தேன் -  வேற்றுமைத் தொடர்
5 . வா : 
அ) குழந்தை வந்தது -  எழுவாய் தொடர்
ஆ) வந்த குழந்தை -  பெயரெச்சத் தொடர்
இ)  வந்தது குழந்தை - வினையெச்சத் தொடர்
ஈ)  குழந்தையே வா ! -  விளித்தொடர்
உ) குழந்தைக்காக வந்தாள் -  வேற்றுமைத் தொடர்


========================================================


பிறமொழிச் சொற்கள் பிறமொழிச் சொற்களை தமிழ்ச் சொற்களாக மாற்றி எழுதுக .


இயல் - 6       ப.எண்  : 150

1. கோல்டு பிஸ்கட் -  தங்கக் கட்டி
2. ஈக்வலாக -  சரிசமமாக
3 . வெயிட் -  எடை
4 . பட் - ஆனால்
5 . எக்ஸ்பெரிமெண்ட் -  பரிசோதனை
6. ரிப்பீட் -  மீண்டும்
7 .ஆன்சரை - விடையை
8 .ஆல் த பெஸ்ட் -  வாழ்த்துகள்
9 .தராசு - துலாக்கோல்

-------------------------------------------------------------------------------------------------------

பின்வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக .

        இயல் 8                   ப.எண்  : 199

பேச்சு வழக்கு :

"  தம்பீ?   எங்க நிக்கிற ? "
"  நீங்க சொன்ன எடத்திலதாண்ணே !  எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது ."
"  அங்கனக்குள்ளேயே  டீ சாப்டுட்டு,  பேப்பரப்  படிச்சுக்கிட்டு இரு ... நா வெரசா  வந்துருவேன் "
" அண்ணே !  சம்முவத்தையும்  கூட்டிக்கிட்டு வாங்கண்ணே !  அவனெப் பாத்தே  ரொம்ப நாளாச்சு !"
"  அவம்பாட்டியோட  வெளியூர் போயிருக்கான் . உங்கூருக்கே  அவனெக்  கூட்டிக்கிட்டு  வர்றேன். "
"ரொம்பச் சின்ன வயசுல  பார்த்ததுண்ணே !  அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும் !"
" இப்போ ஒசரமா வளர்ந்துட்டான் !  ஒனக்கு அடையாளமே தெரியாது !  ஊருக்கு எங்கூட வருவாம்  பாரேன்! சரி ,  போனை வையி,   நாங் கெளம்பிட்டேன் "
"சரிங்கண்ணே "


எழுத்து வழக்கு :

 தம்பி!  எங்கே நிற்கிறாய் ?"
" நீங்கள் நிற்கச் சொன்ன  இடத்தில்தான்  நிற்கிறேன் . எதிர்புறத்தில் ஒரு தேநீர்க் கடை இருக்கிறது ."
"  அங்கேயே தேனீர் சாப்பிட்டுவிட்டு  செய்தித்தாளைப் படித்துக்கொண்டு  இரு . நான் விரைவாக வந்து விடுவேன் ."
" அண்ணா!  சண்முகத்தையும் அழைத்துக் கொண்டு வாருங்கள்  அண்ணா !  அவனைப் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. "
" அவன் பாட்டியோடு  வெளியூர் போயிருக்கிறான் . உங்கள் ஊருக்கு அவனையும் அழைத்துக் கொண்டு வருகிறேன் ."
" மிகச் சிறிய வயதில் பார்த்தது அண்ணா ! அப்பொழுது அவனுக்கு மூன்று வயது இருக்கும் ! "
" இப்பொழுது உயரமாக வளர்ந்து விட்டான் . உனக்கு அடையாளமே தெரியாது ! ஊருக்கு எங்களுடன் வருவான்  பார் ! சரி, தொலைபேசியை வை, நான் புறப்பட்டு விட்டேன் ."
"  சரி அண்ணா "

========================================================


சொற்களைப் பிரித்துப் பார்த்து பொருள் தருக .

 இயல் 8             ப.எண்  : 200
1 . கானடை
அ)  கான் அடை  -  காட்டைச்  சேர்
ஆ) கால் நடை -  காட்டுக்கு நடத்தல்
இ) கால் நடை  -  காலால் நடத்தல்

2.  வருந்தாமரை
அ) வரும் தாமரை -  வருகின்ற தாமரை
ஆ)  வருந்தாமரை -  வருந்தாத மான்
இ)  வரும் தாமரை -  வரும் தாவுகின்ற மான்

3.  பிண்ணாக்கு
அ)  பிண்ணாக்கு -  எள் எடுத்த  சக்கை
ஆ)  பிள் நாக்கு -  பிளவுபட்ட நாக்கு

4.  பலகையொலி
அ)  பலகை  ஒலி -  பறவையின் சத்தம்
ஆ)  பல கை ஒலி -  பல கைகளின் சத்தம் எழுப்புவது





--------------------------------------------------------

Post a Comment

0 Comments

Ad Code