Ad Code

திருக்குறள் - கடவுள் வாழ்த்து

திருக்குறள் அறத்துப்பால் - பாயிரம் அதிகாரம் 1 - கடவுள் வாழ்த்து



1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

பொருள்: அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதல்; அதேபோல் ஆதிபகவன் உலகில் உள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான்.

2.கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் 

நற்றாள் தொழாஅர் எனின்.

பொருள்: தூய அறிவு வடிவான இறைவனின் நன்மை தரும் திருவடிகளைத் தொழாதவர் என்றால், அவர் கற்றதனால் உண்டான பயன் யாதுமில்லை.

3.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

 நிலமிசை நீடுவாழ் வார்.

பொருள்: அன்பர் நெஞ்சமாகிய மலரின்மேல் சென்று வீற்றிருப்பவனது சிறந்த திருவடி களைச் சேர்ந்தவர்களே, உலகில் நிலையாக வாழ்வார்கள்.

4.வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

 யாண்டும் இடும்பை இல.

பொருள்: விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவன் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு எவ்விடத்திலும்  எக்காலத்திலும் துன்பம் இல்லை.

5.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

பொருள்: இறைவனின் மெய்ம்மையோடு சேர்ந்த புகழையே விரும்பினவரிடத்து, அறியாமை என்னும் இருள் சார்ந்த இருவகை வினைகளும் வந்து சேரா.

6.பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

 நெறிநின்றார் நீடுவாழ் வார்

பொருள்: ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனின் பொய்ம்மை இல்லாத ஒழுக்கநெறியில் நின்றவரே நிலையான வாழ்வினர் ஆவர்.

7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் 

மனக்கவலை மாற்றல் அரிது

பொருள்: தனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனின் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும்.

8.அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

 பிறவாழி நீந்தல் அரிது

பொஅருள்: அறக் கடலான அந்தணனின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல், பிறர்க்கு, இன்பமும் பொருளும் ஆகிய கடல்களைக் கடத்தல் இயலாது.

9.கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை

பொருள்: எண்வகைக் குணங்களில் உருவான இறைவன் திருவடிகளை வணங்காத தலை, கேளாக் காது காணாக் கண்ணும் போலப் பயனில்லாதது .

10.பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

பொருள்: இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள்; சேராதவர்களால் கடக்க இயலாது.

இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள்; சேராதவர்களால் கடக்க இயலாது.

Post a Comment

0 Comments

Ad Code