Ad Code

10th Tamil Unit - 8 நெடுவினா

10th Tamil Unit - 8 நெடுவினா இராமானுசர்- நாடகம் - நெடுவினா
;

1.குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக


மாணவன் - கொக்கைப் போல, கோழியை போல - உப்பைப் போல - இருக்க வேண்டும் கொக்கு காத்திருந்து கிடைக்ககும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் - குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி - கண்ணுக்குத்தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் - ஆசிரியர் விளக்கம் - மாணவன் மகிழ்ச்சி.


காட்சி-1

இடம்.              : திருமலை புதூர் குகன் இல்லம் பாத்திரங்கள் :  குகன், செழியன் (மாணவர்கள்), ஆசிரியர் தமிழ்வாணன்


குகன்.            : செழியா! வந்துவிட்டாயா,

செழியன் : வந்துவிட்டேன் குகன். இன்று நம் ஆசிரியர் தமிழ்வாணன் அவர்கள்

         மாணவன்எப்படி  இருக்கவேண்டும் என்று சில குறிப்புகளை வழங்குகிறேன் 

       என்றாரே! அவர் இல்லம் செல்வோமா?

குகன் :  செல்வோம் குகன்! இதுவரை நான்கைந்து முறை சென்று பார்த்தோம் ஆசிரியரை சந்திக்க முடியவில்லை.

செழியன் : கட்டாயம் நம்மை சந்திப்பார் .

காட்சி - 2

இடம் : ஆசிரியர் தமிழ்வாணனின் இல்லம் . பாத்திரங்கள் : ஆசிரியர், குகன், செழியன்

மாணவர்கள் இருவரும் :  வணக்கம் ஐயா!

ஆசிரியர் : வணக்கம்!

குகன்: ஐயா! உள்ளே வரலாமா?


ஆசிரியர் : வாருங்கள்! வந்ததன் காரணம் கூறுங்கள்.

செழியன்:   ஐயா! வாழ்வில் முன்னேற சில குறிப்புகளைச் சொல்லி அறிவுரை கூறுகிறேன் என்றீர்களே....

ஆசிரியர்: 'கொக்கைப் போல' வாய்ப்பு கிட்டும் வரை கொக்கைப் போல காத்திருக்க வேண்டும். வாய்ப்பு கிட்டியவுடன் சரியாகப் பயன்படுத்த வேண்டும்

.அதைத்தான் வள்ளுவர், "கொக்கொக்க' எனப் பாடியுள்ளார் 

குகன் : சரிங்க ஐயா! இனிமேல் நாங்கள் அவசரப்பட்டு எதையும் சிந்திக்காது செயல்பட மாட்டோம்.

ஆசிரியர் : அடுத்து 'கோழியைப் போல' தான்!

செழியன்: ஆமாங்க ஐயா!

ஆசிரியர் : குப்பையை கிளறினாலும் குப்பைக்குள் இருந்தாலும் தனக்குத் தேவையான 'உணவை மட்டுமே' கொத்தித் தின்னும். அதுபோல இந்த சமுதாயத்தில் உங்களைக் கெடுக்கும் குப்பைகளைப் போல பல இருந்தாலும் உமக்குத் தேவையான நன்மணிகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும்.

இருவரும் : நன்றாகப் புரிந்தது ஐயா!

ஆசிரியர்:  இன்னும் ஏதேனும் குறிப்பு உள்ளதா.

குகன்: ஆம், இருக்கிறதே! மூன்றாவதாக 'உப்பைப்போல' என்பதன் விளக்கம் என்ன? ஐயா!

ஆசிரியர்:  கூறுகிறேன்! உப்பைக் கண்ணால் பார்ப்போம். சுவையை நாவில் இட்டு உணர்ந்துதான் அறிவோம். அதுபோல ஒவ்வொருவரின் வெளித்தோற்றம் எப்படியிருப்பினும், உங்களைச் சார்ந்தவரின் குணநலன்களை ஆராய்ந்து உணர்ந்து அறிந்து நடந்து கொள்ளுங்கள் உப்பு குறைவானாலும் உண்ண முடியாது. அதிகமானாலும் உண்ண முடியாது. அளவோடு இருந்தால்தான் ருசிக்க முடியும், அதுபோலத்தான்

உலக நட்பு, பொழுதுபோக்கு செயல்பாடு, ஆடம்பரம் எல்லாம்.

இருவரும்:   மிக்க மகிழ்ச்சி ஐயா! எம் அறிவுக் கண்களைத் திறந்து நாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டீர்கள்.

நன்றி! ஐயா.



Post a Comment

0 Comments

Ad Code