Ad Code

10TH STD 5 MARK QUESTION ANSWERS

 

10TH STD 5 MARK QUESTION ANSWERS -10 ம் வகுப்பு 5 மதிப்பெண் வினாக்கள்-நிற்க அதற்குத் தக | kaTrathukalvi - samacheer Kalvi guide

நிற்க அதற்குத் தக

இயல்  -1  ப.எண் : 24


  இன்சொல் வழி ,   தீய சொல் வழி - அட்டவணையைப்  பார்க்க .
வினா :
இதில் நீங்கள் செல்லும் வழி யாது ?  உங்கள் நண்பருக்கு காட்டும் வழி யாது ?



விடை :
   *இன்சொல் பேசுவதே எனது சிறந்த வழியாகும் .  பிறர் மனம் மகிழும்படி பேசுவேன் ; புகழ் பெறுவேன் ;  நல்ல நண்பர்களுடன் சேர்ந்து அன்பை நிறைவு செய்வேன் .
* இன்சொல் பேச முடியாத போதும் ,  தீய சொற்களைப் பேச வேண்டாம் என நண்பர்களுக்கு வழிகாட்டுவேன் .

-------‐----------------------------------------------------------------------------------------

நிற்க அதற்குத் தக

இயல்  - 2                ப.எண் : 48

2. புயல் அறிவிப்பின் போது  நீங்கள் ,  உங்களையும்  உங்கள் குடும்பத்தாரையும்  காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.

1 .  புயலின்போது வீட்டைவிட்டு வெளியில் செல்ல மாட்டேன் .
2. தொலைபேசி ,  மின்சாதனங்கள்  பயன்படுத்துவதைத் தவிர்ப்பேன்.
3. புயல் அறிவிப்பைக்  கேட்டுப்  பின்பற்றுவேன் .
4. மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கச் செய்வேன் .
5. மாடியில் இருப்பதைத் தவிர்த்து தளப்பகுதியில்  தங்கச் செய்வேன்.
6. வாகனத்தை ஓட்ட நேர்ந்தால்   மரங்கள் ,  மின்கம்பிப் பாதைகள் ,நீர்   வழிகள்  ஆகியவற்றிலிருந்து விலகி பயணம் செய்வேன் ; குடும்பத்தினரும் பின்பற்றச் செய்வேன்.
7.  புயல் காற்று அடிப்பதைக்  கவனித்து எச்சரிக்கையோடு  இருக்கச் செய்வேன் .
------------------------------------------------------------------------------------------

நிற்க அதற்குத் தக

இயல் -3            ப.எண் : 69


3.மருத்துவர் கு. சிவராமனின் இக்கருத்திற்கு சமூக அக்கறையுடனான  உங்களின் பதில்என்னவாக இருக்கும் ?

Answer :
1.  வருங்காலங்களில்   நோய்கள் வராமல் இருக்க  இயற்கையான  உணவுகளை  உண்ணுங்கள் . கீரை ,  பால் , தானிய வகைகள்  போன்றவற்றை உண்ணுங்கள்.  

2. நமது பாரம்பரிய உணவான  காய்கறிகள் ,   பழங்கள் ,  முளைகட்டிய தானியங்கள்  போன்றவற்றை உணவாக  உண்ணுங்கள்.    
3.    காலை உணவாக வேகவைத்த இட்லி ,  சமைக்காத இயற்கை உணவுகளையும்  உண்பது உடலுக்கு மிகவும் நல்லது . எக்காரணத்தைக் கொண்டும்  காலை உணவைத் தவிர்க்கக்  கூடாது . 
4.    பீட்சா , பர்கர்  போன்ற துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும் . எண்ணெயில் பொரித்த உணவுகளைத்  தவிர்ப்பது நல்லது . 
5.  காலை ,  இரவு  ஆகிய இரு வேளைகளில் சிற்றுண்டியும் ,  மதிய வேளைகளில் முழுமையான உணவும்  உண்ணுவது சாலச்சிறந்தது .  
6.  பசித்த பின்னர்  சாப்பிடுவது நல்லது . இயற்கை உணவே இன்பம் தரும் .
                    " உணவே மருந்து "


----------------------------------------------------------------------------------------------------

நிற்க அதற்குத் தக

இயல்  -4                   ப.எண் : 98


4.தங்கைக்கு திறன்பேசிப் பயன்பாட்டால் ஏற்படும்  நன்மை தீமைகளைக் குறித்துக்  கடிதம் எழுதுக .

                                                                                                                                             சேலம் ,
                                                          20.02.2020 .
அன்பு தங்கைக்கு ,
                         அக்கா எழுதும் கடிதம் .நான் நலமாக இருக்கிறேன்.நீ நலமா ? 
            நீ எப்போதும் திறன்பேசியைப்  பயன்படுத்திக்  கொண்டே இருப்பதை அறிந்தேன் . எனவே  அதன் நன்மை தீமைகளைப்  பற்றி   இக்கடிதத்தில்  கூறுகிறேன் .
நன்மைகள் :
1. தினசரி  செய்திகளை அறிந்து கொள்ளலாம் .
2. சிறுசிறு விளையாட்டுகளைத் தெரிந்து கொள்ளலாம் .
3. சில புத்தகங்களைப் படித்து தெரிந்து கொள்ளலாம் .
4.  தொலைதூரத்தில் இருப்பவர்களிடம் முகம் பார்த்துப்  பேசலாம் .
5.  மனதில் உள்ள கவலைகளை நீக்க  ஆடல் பாடல் நிகழ்வுகளைக் கண்டு களிக்கலாம்.

தீமைகள் :
1. திறன்பேசி யை அதிக நேரம் பயன்படுத்துவதால்  கண்கள் பாதிப்பு ஏற்படலாம் .
2.  மனக்குழப்பம் ,  மனநோய் ஏற்பட வாய்ப்பு உண்டு .
3.  திறன்பேசியை  அதிக நேரம் பயன்படுத்துவதால் பல வேலைகளை முடிக்க இயலாமல் போகும் .
4 .  இதில் கூறப்படும் கருத்துக்கள் அனைத்தும்  உண்மையானவை அல்ல .
5. காலவிரயம் ,  பொருள் விரயம்  ஏற்படுகிறது .
     கருத்து :  எனது அருமைத் தங்கையே ! எனவே ,  திறன்பேசியில் உள்ள அனைத்து செய்திகளும் கற்பனையே ; உண்மையானவை அல்ல .
மேலும் மனம் ஒரு குரங்கு . எனவே நம்மை நாம் உணர்ந்து  வேண்டுமென்பதை நீ தெளிவாக உணர்ந்து கொள்வாய் என நம்புகிறேன் .    
                                               அன்புள்ள அக்கா ,
                                                      ராணி

உறைமேல் முகவரி
ராதா  ,
5-வது தெரு ,
மயில் ரோடு ,
சென்னை  -600001 .


----------------------------------=---------------------------------------------------------------



நிற்க அதற்குத் தக

இயல் 5     ப.எண் : 126

5.பள்ளியிலும் வீட்டிலும் நீங்கள் செய்யும் செயல்களைத் தொகுத்து எழுதுக .


பள்ளியில் நான்:
1.  நேரத்தைச் சரியாக கடைப்பிடிப்பேன்.
2. உடன் பயிலும் மாணவரின் திறமையைப் பாராட்டுவேன் .
3. ஆசிரியர் நடத்தும் பாடத்தை  அக்கறையோடு கவனிப்பேன் .
4 . நண்பர்களுடன்  படிப்பேன் .
5 . வகுப்பறைத்  தூய்மையைப் பாதுகாப்பேன் .


வீட்டில் நான் :
1. வீட்டுப் பணிகளைப் பகிர்ந்து செய்வேன் .
2. அம்மாவுக்கு  சமையலறையில் உதவி செய்வேன் .
3. அப்பா கூறும்  வேலைகளைச் செய்வேன் .
4.  சிறிது நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்  பார்ப்பேன்.
5. வீட்டைத் தூய்மையாக வைத்து இருப்பேன் .

----------------------------------------------------------------------------------

நிற்க அதற்குத் தக

இயல் -6       ப,எண் : 153

6.நிகழ்கலைகளைப் பாதுகாக்கவும் வளர்க்கவும்  மேன்மேலும் பரவலாகவும்   நீங்கள் செய்யவிருப்பவனவற்றை வரிசைப்படுத்துக .

1. பிறந்தநாள் விழாக்களில் மயிலாட்டம் முதலான கலைகளை நிகழ்த்த முனைவேன்.
2. எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்த ஏற்பாடு செய்வேன் .
3. எங்கள் ஊரில் நடைபெறும்  மாரியம்மன் திருவிழாவிற்கு  மயிலாட்டம் ,   கரகாட்டம்,  பொம்மலாட்டம் போன்றவை நடைபெற ஏற்பாடு செய்வேன் .
4.  பண்டிகை  நாட்களில்  நாடகங்கள் , நிகழ்கலை ஆட்டங்கள் போன்றவை மூலம் கருத்துக்களை மக்களுக்கு கூறச் செய்வேன் .
5 . கோவில்களில்  தாரை , தப்பட்டை முழக்கங்கள் மற்றும்  போட்டிகள் நடைபெற ஏற்பாடு செய்வேன் .
6. விவசாயத்தைப் பேணவும் , இயற்கை உணவு உண்ணவும் நிகழ்கலைகள் மூலம்  ஆண்டுதோறும் விழா எடுக்க ஏற்பாடு செய்வேன் .

------------------------------------------------------------

நிற்க அதற்குத் தக

இயல்  - 7          ப.எண் :182

7.கோவில்களில்  பழம்பெரும்  நினைவுச் சின்னங்களையும்   கல்வெட்டுகளையும் எவ்வாறு பராமரிக்கவும் பாதுகாக்கவும்  உங்களால் இயன்ற செயல்களைக்  குறிப்பிடுக.

1. கல்வெட்டுகளின் வழி அறியலாகும் செய்திகளை என் நண்பர்களுக்குக் கூறுவேன் .
அவற்றின் மதிப்பைக் குறைக்கும்படி எதுவும் கூற அனுமதிக்கமாட்டேன்.

2.   கல்வெட்டுகள் குறித்து அவர்களைப் பெருமிதம் அடையச் செய்வேன் .
முன்னோர்களின்  பண்பாட்டை அறிய உதவும்  கல்வெட்டுகளை  எவரும் சிதைக்காமல் பாதுகாப்பேன் .
3. பழந்தமிழ் வரலாற்றுச் சான்றுகளைப்  பாதுகாப்பேன் .
  பழந்தமிழ் வரலாற்று சான்றுகளை  மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் கணினியில் பதிவு செய்வேன் .

4. பழந்தமிழரின்  பண்பாடுகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறி  பண்பாடுகளை வளர்ப்பேன்.
  பழந்தமிழர்களின் பண்பாடுகளை   உலகில் அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் வானொலி , தொலைக்காட்சிகளில்  தகவல் அளிப்பேன் .

5. ஆண்டுதோறும் விழா எடுப்பதன் மூலம் நினைவுச் சின்னங்கள் ,  கல்வெட்டுகள் பராமரிக்கவும்
பாதுகாக்கவும்  செய்வேன் .

------------------------------------------------------------

நிற்க அதற்குத் தக

இயல்  - 8                ப.எண் : 201

8.மாணவர்கள் நிலையில்  பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளும்  எழுதுக .


நாம் செய்ய வேண்டுவன (அறங்கள் ) :
1. நல்ல சொற்களையே தேர்ந்தெடுத்துப் பேசுதல் .
2. ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் புறம் பேசாதிருத்தல் .
3.  பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடல் .
4.  நண்பர்களுக்கு உதவும் குணத்தை வளர்த்தல் .
5.  நண்பர்களின்  பொருட்களை அனுமதியுடன் பயன்படுத்துதல் .

அறங்கள் தரும் நன்மைகள் :
1.  நல்ல நண்பர்களைப் பெறலாம் ; எதிரிகளையும் நண்பராக்கலாம் .
2. நற்பண்புகளைக்  கடைப்பிடிக்கலாம் ; நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ளலாம்.
3.  விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளலாம் .
4.  தன்னுடைய வேலைகளை முடித்துக் கொள்ளும் பண்பு வளரும் .
5.  அடுத்தவர் பொருளின் மேல் ஆசை கொள்ளாத பண்பு வளரும் .

------------------------------------------------------------

நிற்க அதற்குத் தக

இயல் - 9             ப.எண் : 229

9.மாணவர்கள் செய்து பார்த்த உதவிகளால் எய்திய  மனநிலையை பட்டியலிடுக .




Post a Comment

0 Comments

Ad Code