Ad Code

Samacheer Kalvi 6th std Tamil guide Term-1 -இன்பத்தமிழ் Book Back Question and Answer Solution

Samacheer Kalvi 6th std Tamil Term-1 -இன்பத்தமிழ் Book Back Question and Answer Solution

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

 1.ஏற்றத் தாழ்வற்ற .......... அமைய வேண்டும். 

அ) சமூகம் 

ஆ) நாடு 

இ) வீடு

ஈ) தெரு விடை

 அ) சமூகம்

2.நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ............. ஆக இருக்கும் 

அ) மகிழ்ச்சி ஆ) கோபம் இ) வருத்தம் ஈ) அசதி

விடை : ஈ) அசதி

3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) நிலயென்று 

இ) நிலவன்று

ஆ) நிலவென்று

ஈ) நிலவுஎன்று

விடை : ஆ) நிலவென்று

4.தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்

அ) தமிழங்கள்

இ) தமிழுங்கள்

ஆ) தமிழெங்கள்

ஈ) தமிழ்எங்கள்

விடை : ஆ) தமிழெங்கள்

5. "அமுதென்று" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) அமுது + தென்று 

ஆ) அமுது + என்று 

இ) அமுது + ஒன்று 

ஈ) அமு + தென்று

விடை:ஆ) அமுது+என்று 

6. "செம்பயிர்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) செம்மை + பயிர் 

ஆ) செம் + பயிர் 

இ) செமை + பயிர் 

ஈ) செம்பு + பயிர்

விடை:அ) செம்மை + பயிர்

7.இன்பத்தமிழ் - பாடலின்கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக

1)விளைவுக்கு - பால்

2)அறிவுக்கு -  வேல்

3) இளமைக்கு - நீர் 

4) புலவர்க்கு - தோள்

விடைகள்

1) விளைவுக்கு - நீர்

2)அறிவுக்கு - தோள்

3) இளமைக்கு - பால்

4)புலவர்க்கு- வேல்


8. ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக

விடை

(எ.கா.) பேர் - நேர்

: 1)பேர் - நீர்

2)பேர் - ஊர்

3. பால் - வேல்

4)வான் - தேன்

5)தோள் - வாள்.

 

VI. குறுவினா

1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

  • பாரதிதாசன் தமிழுக்கு அமுதம், நிலவு, மணம் என பெயர்களை சூட்டியுள்ளார்

2. நீங்கள் தமிழை எதனாேடு ஒப்பிடுவீர்கள்?

  • நாங்கள் தமிழை உயிரோடு ஒப்பிடுவோம். காரணம் உயிர் உள்ளவரைதான் உடலக்கு மதிப்பு அது போல தமிழ் உள்ளவரைதான் தமிழனுக்கு மதிப்பு


VII. சிறுவினா

3. ‘இன்பத்தமிழ்’ – பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டினை எழுதுக.

‘தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்

2. விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?

  • நீரின்றி அமையா உலகு என்பது வள்ளுவன் வாக்கு. உலக உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது நீராகும்.அத்தகைய நீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றாங்கரையில் தான் மனித நாகரீகம் வளர்ந்துள்ளது. இதுவே விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு ஆகும்.

VIII. சிந்தனை வினா

1. வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்ப டுகிறது? உங்கள் கருத்தைக் கூறுக.

  • வேல் என்பது ஓர் ஆயுதம். அது எல்லா உயிர்களையும் ஊடுருவிப் பார்க்கும் தன்மையுடையது.
  • வேல் மனிதர்களின் கரங்களில் இருக்கும்போது மனிதனுக்கு மிகப்பெரிய தைரியத்தை கொடுக்கும்.
  • அதுபோல புலவர்களுக்கு தமிழ் கையிலிருந்தால் தைரியத்தையும். உற்சாகத்தையும் கொடுக்கும். புலவர்களின் பாடல்கள் மனித உள்ளங்களை ஊடுருவிப் பார்க்கும் தன்மையுடையது.
  • அதனால்தான் கவிஞர் வேலையும் தமிழையும் ஒப்பிட்டுப்பாடியுள்ளார்.


கூடுதல் வினாக்கள்


A. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. _______________ அமுதென்று பேர்

அ.தமிழிற்கு

ஆ.தமிழுக்கு

இ.தமிழுக்கும்

ஈ.தமிழுக்கே

விடை : தமிழுக்கும்

2. தமிழ் நமது இளமைக்குக் காரணமான _____________ போன்றது

அ.தேன்

ஆ.நெய்

இ.நெல்

ஈ.பால்

விடை : பால்

3. தமிழ்மொழி, புலவர்களுக்கு ______________ போன்றது

அ.அம்பு

ஆ.கேடயம்

இ.வாள்

ஈ.வேல்

விடை : வேல்

4. நமது சாேர்வை நீக்குவதில் தமிழ் ___________ போன்றது

அ.சாேறு

ஆ.தேன்

இ.நீர்

ஈ.பால்

விடை : தேன்

5. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதிமிக்க _____________ ஆகும்.

அ.அணிகலம்

ஆ.கவசம்

இ.வாள்

ஈ.வேல்

விடை : வாள்

6. சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்

அ.பாரதியார்

ஆ.பாரதிதாசன்

இ.ராமலிங்க அடிகளார்

ஈ.திருவள்ளுவர்

விடை : பாரதிதாசன்

7. புரட்சிக்கவி, பாவேந்தர் என்று போற்றப்படுபவர்

அ.பாரதிதாசன்

ஆ.கண்ணதாசன்

இ.அழ.வள்ளியப்பா

ஈ.கவிமணி

விடை : பாரதிதாசன்

8. பாரதியாரின் கவிதைகள் மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம்பெயரை மாற்றிக் கொண்ட கவிஞர்

அ.தேசிய விநாயகம் பிள்ளை

ஆ.சுரதா

இ.வள்ளலார்

ஈ.பாரதிதாசன்

விடை : பாரதிதாசன்

9. தமிழக்கு அமுதென்று பேர் எனப் பாடியவர்

அ.பாரதியார்

ஆ.ஓளவையார்

இ.பாரதிதாசன்

ஈ.வள்ளலார்

விடை : பாரதிதாசன்

10. தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய _____________ போன்றது

அ.அம்பு

ஆ.வானம்

இ.வாள்

ஈ.வேல்

விடை : வானம்

11. தமிழ் எங்கள் அறிவுக்கு துணை கொடுக்கம் _____________ போன்றது

அ.தேன்

ஆ.தோள்

இ.நெல்

ஈ.பால்

விடை : தோள்

B. பொருத்துக

1.வாழ்வுக்கு –அ. வாள்

2.உயர்வுக்கு – ஆ.ஊர்

3.கவிதைக்கு – இ.வான்

விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

C. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. தாய்மொழியைத் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன
  2. பாரதிதாசன் தமிழை பலவிதங்களில் போற்றுகின்றார்
  3. எங்கள் வாழ்விற்காக உருவாக்ப்பட்ட ஊர் தமிழ்
  4. இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு ஊர் ஆகும்


C. சேர்த்து எழுதுக

  1. அமுது + என்று – அமுதென்று
  2. இன்பம் + தமிழ் – இன்பத்தமிழ்
  3. மணம் + என்று – மணமென்று


D.பிரித்து எழுதுக

  1. நிலவென்று – நிலவு + என்று
  2. புகழ்மிக்க – புகழ் + மிக்க
  3. சுடர்தந்த – சுடர் +தந்த


Post a Comment

0 Comments

Ad Code