Ad Code

12th தமிழ் மாதிரி வினாத்தாள் 2020-21 - Model Question Paper - 1

12th தமிழ் மாதிரி வினாத்தாள் 2020-21 - 

Model Question Paper - 1

பொதுத் தமிழ்

Language - TAMIL

கால அளவு : 2.30 மணி நேரம்.            மதிப்பெண்கள் : 90

அறிவுரைகள் : (1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளதா என்பதனைச்

சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின், அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்

(2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்

அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும்

குறிப்பு : (i) விடைகள் தெளிவாகவும், குறிப்பிட்ட அளவினதாகவும், சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

[ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுத வேண்டும்.

பலவுள் தெரிக.                                           14x1=14

I. அனைத்து வினாக்களுக்கும் விடை தருக

1.இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற இலக்கண நூல் 

அ) யாப்பருங்கலக்காரிகை ஆ)தண்டியலங்காரம்  இ) தொல்காப்பியம்   ஈ) நன்னூல்

2.கருத்து 1 : இயல்பு வழக்கில் தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு 

கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது

அ) கருத்து 1 சரி    ஆ) கருத்து 2 சரி

 இ) இரண்டு கருத்தும் சரி     ஈ) கருத்து 1 சரி, 2 தவறு

3.நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது" - என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது .

அ) சூரிய ஒளிக்கதிர்  ஆ) மழை மேகங்கள்

 இ மழைத்துளிகள்.   ஈ) நீர்நிலைகள்

4."இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக" என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது

அ) வக்கிரம்    ஆ) அவமானம்    

இ) வஞ்சனை.       ஈ) இவை அனைத்தும்

5.உவா உற வந்து கூடும் உடுபதி, இரவி ஒத்தார்" - யார்? யார்

அ) சடாயு, இராமன்     ஆ) இராமன், குகன் இ) இராமன்,சுக்ரீவன்.  ஈ)இராமன், சவரி

6.வையகமும் வானகமும் ஆற்றல் அரிது - எதற்கு

அ) செய்யாமல் செய்த உதவி 

ஆ) பயன்தூக்கார் செய்த உதவி

இ)) தினைத்துணை நன்றி 

ஈ) செய்ந்நன்றி

7.தெப்பம், பாதுகாப்பு - என்று பொருள்             தரும் சொற்கள் 

அ) வெகுளி, புணை     ஆ) ஏமம், திரு 

 இ) புணை , ஏமம்.  ஈ) வெகுளி, திரு

8.பகையும் உளவோ பிற -இதில் பகை என்பது

அ) புணை  ஆ) சினம்  இ) ஏமம்  ஈ) திரு

9.காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை" - இத்தொடரில் 'கலன்' உணர்த்தும் பொருள் 

அ) போர்க்கருவி   ஆ) தச்சுக்கருவி 

இ) இசைக்கருவி ஈ) வேளாண் கருவி

10.சுரதா நடத்திய கவிதை இதழ் 

அ) இலக்கியம்   ஆ) காவியம்

 இ) ஊர்வலம்.  ஈ) விண்மீன்

11.குழிமாற்று' எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்?

அ) இலக்கியம் ஆ) கணிதம் 

இ) புவியியல் ஈ) வேளாண்மை

11.விளியறி ஞமலி' - இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது 

அ)எருது   ஆ) குதிரை   இ) நாய் ஈ) யாழி

12. அன்பும் அறனும் இலக்கணக்குறிப்பு

அ)பண்புத தொகை ஆ)எண்ணும்மை இ)முற்றும்மை ஈ)உம்மைத்தொகை

13.தெப்பம், பாதுகாப்பு - என்று பொருள்             தரும் சொற்கள் 

அ) வெகுளி, புணை     ஆ) ஏமம், திரு 

இ) புணை , ஏமம்.  ஈ) வெகுளி, திரு

14.கடலின் பெரியது

அ) உற்ற காலத்தில் செய்த உதவி

இ) திணை அளவு செய்த உதவி

ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி

ஈ) அவசரத்தில் செய்த உதவி

III. குறுவினா.(செய்யுள்)                            3x2=6


(அ) எவையேனும் மூன்றனுக்கு விடை தருக


குறுவினா ( உரைநடை).                               2x2=4

(ஆ) எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

IV) எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

இலக்கணம்.                                                7x2=14

Post a Comment

0 Comments

Ad Code